
கொலம்பியாவில் நெவடோ டெல் ஹ§யிலா எரிமலை லாவா எரிகுழம்பை கக்க ஆரம்பித்தது. கந்தகடை ஆக்சைடு எரிவாயு வெளிவந்ததையடுத்து கொலம்பியா அரசு அவசர அவசரமாக சுமார் 15 ஆயிரம் பொதுமக்களை அங்கிருந்து வெளியேற்றியது. எரிமலைக் குழம்பு தொடர்ந்து வெளியே வருகிறது.

சீனா தற்போது நன்னீர் முத்துக்களை பெருமளவு உற்பத்தி செய்து வருகிறது. இதற்காக நியூஜி நகரில் தனி தொழிலகங்களையும் அது உருவாக்கியுள்ளது. 1970லிருந்தே இந்நகரில் நன்னீர் முத்துக்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. சீனாவின் 70 சதவிகித முத்துக்கள் இங்கிருந்து செல்பவைதான். இப்போது சர்வதேச சந்தையைக் குறிவைத்து இவை இயங்குகின்றன. நமது தூத்துக்குடியின் பழம் பெருமையும் இதுபோல மீட்கப்படுமா?